ஸ்ரீ குணரத்ன கோசம்-51 December 1, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.trackback

பொருள் – தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம். உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை, “உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம். அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம். இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.
விளக்கம் – சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள் ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார். அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார். இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி, அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.
படம் – நம் வீட்டு மணப்பெண்ணை அழைத்துவரும் மகிழ்ச்சியில் அனைவரும் உள்ளனர் போலும் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
Comments»
No comments yet — be the first.