ஸ்ரீ குணரத்ன கோசம்-54 December 4, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.Tags: ranganaki, 10 heads, ravanan, thirupaarkadal,
trackback

பொருள் – தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும், உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்? உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான். உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான். அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான். ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான். பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.
விளக்கம் – இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான். திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான். இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?
படம் – பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார், “குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை. ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்? நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள். உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான். ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்.
Comments»
No comments yet — be the first.