74-லக்ஷ்மீ தந்த்ரம் அத் – 4:ச்லோகம்: 28-29-30 February 26, 2008
Posted by sridharan in லக்ஷ்மீ தந்த்ரம்.trackback
4-28 ஏதத் த்வ வ்யூஹாந்தரம் நாம பஞ்சராத்ராபி சப்திதம்
கார்யஸ்ய நயேந தேவா த்வாதச ஏதே வ்யவஸ்திதா:
பொருள் – இந்தப் பன்னிரண்டும் வ்யூஹாந்தரங்கள் எனப் பாஞ்சராத்ர ஆகமத்தால் கூறப்படுகின்றன. இவர்கள் அனைவரும் ஸ்ருஷ்டி முதலான செயல்களில் ஈடுபட்டபடி உள்ளனர்.
4-29 விபோ: அபி அநிருத்தஸ்ய ஹிதாய ஜகதாம் ஹரே: ப்ரஸரோ விபவோ நாம பத்மநாபாதய: ஸ்ம்ருதா:பொருள் – பத்மநாபன் முதலான விபவ ரூபங்கள் ஸ்ரீஹரியின் அநிருத்தன் போன்ற ரூபங்களே ஆகும். இவற்றை இவன் ஏன் எடுக்கிறான்? இவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபோதும், இந்த உலகின் நன்மைக்காக, இது போன்று ரூபங்களில் மட்டுமே உள்ளதாகக் காணபித்துக் கொள்கிறான்.
4-30 ஆவிச்யாவிச்ய குருதே யத்ர தேவநராதிகம் ஜகத் இதம் ஜகந்நாதஸ்தஜ்ஞேயம் விபவாந்தரம்பொருள் – இந்த உலகின் பதியான ஜகந்நாதன் – இந்த உலகின் நன்மையைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது மனிதனாகவோ தேவனாகவோ அவதரித்தபடி உள்ளான். இவை அனைத்தும் பல்வேறு விபவ அவதாரங்கள் ஆகின்றன.
Comments»
No comments yet — be the first.