ஸ்ரீ தயா சதகம் – 13 October 24, 2007
Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.trackback
பொருள் – பெருமை மிகுந்த தயாதேவியே! உனது தயை என்ற வெள்ளமானது கரை புரண்டு ஓடுகிறது. என்னுடைய பாவங்கள் அதில் மூழ்கி விடுகின்றன. இந்த வெள்ளத்தில் ஸ்ரீநிவாஸனும் மூழ்கியபடி இருப்பதால், அவனது கைகளில் எனது பாவங்கள் தேடும்படி ஆகின்றன.
விளக்கம் – ஸ்ரீநிவாஸன் மிகவும் உயர்ந்த மலை மீது உள்ளான். தயையின் வெள்ளமானது அந்த மலையையும் மூழ்கடித்து, அவனையும் மூழ்கச் செய்கிறது. இவ்விதம் ஸ்ரீநிவாஸனே மூழ்கிவிடும் போது, தனது பாவங்கள் மூழ்காமல் இருக்குமா என்று வியக்கிறார்.
பொதுவாக ப்ரளயத்தின்போது இந்த உலகை பகவானே மூழ்கடிப்பது வழக்கமாகும். ஆனால் இங்கு தயையின் வெள்ளத்தில் அவனே மூழ்கி நிற்கிறான். இவ்வாறு செய்யும்போது எனது பாவங்களுக்குக் கை கொடுத்து மீண்டும் காப்பாற்றுபவர்கள் யார் உள்ளனர்?
கிருஷ்ணன் கீதையில் – ஞானம் என்பது அனைத்தையும் எரித்து விடும் – என்றான். ஆனால் கருணையே வடிவான தயாதேவியால் நம் பாவங்களை எரிப்பது என்ற கொடுமையான செயல்களை கூடச் செய்ய இயல்வதில்லை. மாறாக, நமது பாவங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஸ்ரீநிவாஸனை மூழ்க வைத்து, அவனுடைய அந்த நினைவுகளைக் கழுவி விடுகிறாள்.
திருவேங்கடம் என்ற பதத்தில் உள்ள வேம் என்பது எரித்தல், பொசுக்குதல் என்பதாகும். நமது பாவங்களை எரிப்பது திருவேங்கட மலை என்பது இருக்க, இங்கு இவர் உண்மையில் அவ்வாறு நிகழ்வதில்லை, அவை மூழ்கடிக்கப்படுகின்றன என்றார்.
படம் – திருமலையில் தயை வெள்ளமாக ஓடி வரும் காட்சி.
Comments»
No comments yet — be the first.