ஸ்ரீ குண ரத்ன கோசம் – 15 October 26, 2007
Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.trackback
பொருள் – ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள், இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?
விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும். அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.
ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் – அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.
படம் – பட்டர் தனது ச்லோகத்தில் ஸ்ரீரங்கநாதனின் மனம் கவர்ந்தவளே என்றார். இவளுக்கும் அவன் மீது மிகவும் ப்ரியம் உண்டு. இதனை உலகிற்கு உணர்த்தும் வகையில் அவனது திருவுருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தைத் தனது திருமார்பில் சாற்றிக் கொண்டுள்ளதைக் காண்க (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).
Comments»
No comments yet — be the first.