jump to navigation

ஸ்ரீ தயா சதகம்-26 November 6, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.
trackback

கமலா நிலயஸ் த்வயா தயாளு: கருணே நிஷ்கருணா நிரூபணே த்வம்
அத ஏவ ஹி தாவக ஆச்ரிதாநாம் துரிதாநாம் பவதி த்வத் ஏவ பீதி:

பொருள் – தயாதேவியே! ஸ்ரீநிவாஸசன் உன்னால் கருணை உள்ளவன் என்று ஆகிவிடுகிறாள். ஆனால் உனக்குக் கருணை இல்லையோ என்று தோன்றுகிறது – காரணம், உன்னை அண்டியவர்களின் பாவங்கள், உன்னைக் கண்டு அல்லவோ நடுங்குகின்றன?

விளக்கம் – தயையைக் கண்டு அடியார்களின் பாவங்கள் நடுங்குகின்றன. அந்தப் பாவங்கள் குறித்து, தயாதேவிக்கு கருணை ஏற்படுவதில்லை. ஆனால் தனது தொடர்பு உள்ள அனைவரையும் கருணை கொண்டவர்களாக மாற்றுவது தயாதேவியின் இயல்பாகும். இவளது தொடர்பு உள்ளதால்தான் ஸ்ரீநிவாஸனே கருணை உள்ளவனாக இருக்கிறான் என்றார்.

படம் – கருணாமூர்த்தியான ஸ்ரீநிவாஸன்

Comments»

No comments yet — be the first.

Leave a comment