jump to navigation

ஸ்ரீ குணரத்ன கோசம்-48 November 28, 2007

Posted by sridharan in ஸ்ரீகுணரத்னகோஸம்.
trackback

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய். அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால், அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

விளக்கம் – ஸீதை இல்லையென்றால் இராமாவதாரம் சுவைக்காது. ருக்மிணி இல்லையென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது. வாமனனாக வந்தபோதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான். வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.

படம் – ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல, அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ளான். அதற்கு இந்தப் படமே சான்று (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்).

Comments»

No comments yet — be the first.

Leave a comment