jump to navigation

ஸ்ரீ தயா சதகம் –78 December 28, 2007

Posted by sridharan in ஸ்ரீ தயா சதகம்.
trackback
க்ஷண விலயிநாம் சாஸ்த்ர அர்த்தாநாம் பலாய நிவேசிதே
ஸுர பித்ரு கணே நிர்வேசாத் ப்ராக் அபி ப்ரளயம் கதே
அதிகத வ்ருஷ க்ஷ்மா ப்ருத்நாதாம் அகால வசம்வதாம்
ப்ரதிபுவம் இஹ வ்யாசக்க்யு: த்வாம் க்ருபே நிருபப்லவாம்

பொருள் – தயாதேவியே! சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட கர்மங்களுக்கான பலன்களை அளிப்பதற்கென்று தேவர்கள், பித்ருக்கள் போன்றவர்களின் கூட்டம் உள்ளது. ஆனால் இவர்கள் அளிக்கும் பலன்கள் மிகவும் குறைந்த காலத்திலேயே மறைந்து விடுகின்றன. மேலும் இவர்களும் அந்தப் பலன்கள் அழிவதற்கு முன்பாகவே அழித்து விடுகின்றனர். ஆனால் நீயோ ஸ்ரீநிவாஸனை அடைந்தவளாக, காலத்திற்குக் கட்டுப்படாதவளாக, யாராலும் தடுக்க இயலாதவளாக உள்ளாய். இதனை உணர்ந்த அறிஞர்கள் அவர்களின் இடத்தில் நீ இருப்பதாகக் கூறினர்.

விளக்கம் – யாகம், ஹோமம் முதலான கர்மங்களை, விரும்பும் பலனை அடையும் பொருட்டு சாஸ்திரங்கள் விதித்துள்ளன. அத்தகைய பலனை அளிப்பதற்காக தேவர்களையும் பித்ருக்களையும் ஸ்ரீநிவாஸன் நியமித்துள்ளான். அவர்களும் அவன் ஆணைக்கு ஏற்ப நமக்குப் புண்ணிய பலன்களை அளிக்கின்றனர்.

ஆனால் நம்முடைய புண்ணிய பலன்கள் நமக்குக் கிட்டும் காலம் வரையில் அந்தத் தேவர்களும், பித்ருக்களும் அழியாமல் இருப்பதற்கு உத்திரவாதம் இல்லை. அவர்கள்அழிந்து விட்டால் நமக்கு அந்தப் பலன்களை யார் அளிப்பார்கள்? அந்தச் செயலை தயாதேவியே செய்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

படம் – நன்றி http://www.devshoppe.com

Comments»

No comments yet — be the first.

Leave a comment