பேசும் வைணவம் – 8 August 23, 2008
Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.trackback
கடந்த பகுதியில் கண்ட சித், அசித், ஈச்வரன் என்ற மூன்றில், முதலில் அசித் என்பதைக் காண்போம். அசித் அல்லது அசேதனம் என்பது ஞானம் அற்றதாகும். அவை தானாகவே செயல்பட இயலாதவை ஆகும். பலன்களை அனுபவிக்கத் தெரியாதவை ஆகும். இவை மூன்று வகைப்படும். அவையாவன – த்ரிகுணம் (ப்ரக்ருதி), காலம் மற்றும் சுத்தஸத்வம் – ஆகும்.
த்ரிகுணம்
மூன்று குணங்களாவன – ஸத்வம், ரஜஸ் மற்றும் தாமஸம் ஆகும். இவை ஜீவனை எம்பெருமானின் ஸ்வரூபத்தையும், ஜீவனின் ஸ்வரூபத்தையும் மறைக்கவல்லவை ஆகும். ஜீவனைத் தங்கள் பக்கம் இழுக்கவல்லவை ஆகும். ஸத்வம் என்பது மேலோங்கும்போது மகிழ்வு, ஞானத்தின் மீது விருப்பம் ஆகியவை உண்டாகின்றன. ரஜஸ் தலை எடுக்கும்போது உலகவிஷயங்கள் மீது பற்றுதல், துன்பம் ஆகியவை உண்டாகின்றன. தாமஸ குணம் தலையெடுக்கும்போது மயக்கம், உறக்கம், சோம்பல் ஏற்படுகிறது. இவை மூன்று சமமாக உள்ள நிலை என்பது மஹாப்ரளய காலம் ஆகும். இவற்றுள் ஒன்று மட்டும் மேலோங்கும்போது ஸ்ருஷ்டி காலம் தொடங்குகிறது.
All are good.execting more things.