பேசும் வைணவம் – 9 September 15, 2008
Posted by sridharan in ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்.trackback
ப்ரக்ருதிக்கு மூலப்ரக்ருதி, அக்ஷரம், ப்ரதானம், அவ்யக்தம் மற்றும் த்ரிகுணம் என்ற பல பெயர்கள் உண்டு. இந்த ப்ரக்ருதியே எம்பெருமானின் ஸ்வரூபத்தை நமக்கு மறைத்து, நம்மை பந்தப்படுத்துகிறது.
ப்ரளயகாலத்தில் ப்ரக்ருதியானது ஸூஷ்ம நிலையில் உள்ளது. ஸ்ருஷ்டி காலத்தில் மாறுபாடு அடைந்து மஹத் என்னும் தத்துவம் ஆகிறது. மஹத் என்னும் தத்துவத்தில் இருந்து அஹங்காரம் தோன்றுகிறது. ப்ரளய காலத்தில் ப்ரக்ருதி ஒரே போன்ற மாறுபாடுகளை அடைவதால் அவ்யக்தம் எனப்படுகிறது. ஸ்ருஷ்டி காலத்தில் பலவிதமான மாறுபாடுகளை அடைவதால் வ்யக்தம் எனப்படுகிறது. இந்த வ்யக்தம் என்பது மஹத் தொடங்கி ப்ருத்வீ என்பது வரை 23 தத்துவங்களாக பிரிக்கப்படுகிறது.
swamin: The font is not readable. probably that is why people could not read it and approached you for clarification on this. will it be possible to make the writeup more readable so that it could be read by all who are regularly interested in your essays on vaishnavam.
dasan
v.s.satagopan